Saturday 12 June 2010

பூந்துணர் நூல் விமர்சனம் – ‘கவிஞர்’ முல்லை அமுதன்



நல்ல கலை இலக்கியங்களை வளம்படுத்தவெண்ணி கலையார்வம் கொண்டவர்களால் உருவாக்கப்பட்டது தான் பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம். எழுத்தாளர்களின் ஒருங்கினைப்பினால் மாதாமாதம் இலக்கிய நிகழ்வுகளை நடாத்தி அதன் மூலம் பெறப்பட்ட இலக்கிய வடிவங்களைப் புடம் போட்டு கனகச்சிதமாக ‘பூந்துணர்’ எனும் நூலாக வெளிக் கொணந்துள்ளனர்.

பலரைச்சொன்னாலும் பேராசிரியர் கோபன் மகாதேவாவின் தொடர்ச்சியான முயற்சியினால் இவ் இலக்கிய வட்டம் தொடர்கிறது

ஈழத்து மட்டுவிலில் 1934ல் பிறந்த பேராசிரியர் கோபன் மகாதேவா தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் மிக்கவராக இங்கிலாந்திலும் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர்கிறார். இவர் தனது ஆறு சொந்த நூல்களையும் மற்றையோரின் 18 நூல்களையும் ஏற்கனவே வெளியிட்டுள்ளார். இவர் பன்முக ஆற்றல் உள்ளவர். நேரம் தவறாமை என்பது இவரது கொள்கைகளில் ஒன்றாகும்.

யுகசாரதி என்னும் பெயரில் அறியப்பட்ட திரு. எஸ். கருணானந்தராஜா அவரது பாரதியின் குயில்பாட்டின் தத்துவ மர்மம் எனும் ஆய்வு நூலுக்காக தமிழக ஸ்ரீராம் நிறுவனத்தினரால் ‘பாரதி இலக்கிய செல்வர்’ எனும் பட்டம் பெற்றவர். நடிப்பிலும் ஆற்றல் மிக்க இவர் ஏற்கனவே நான்கு நூல்களை வெளியிட்டவர். இவரது ஈழத்தாயின் சபதம் இன்றும் பலராலும் பேசப்படுகிறது.

திரு. க. சிவானந்தன் அவர்கள் தமிழ் ஈழத்து யாழ்ப்பாணத்து நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பிரித்தானியாவில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகிறார். பேராசிரியர் கைலாசபதி மீது அபிமானம் கொண்டவர். சிறந்த பேச்சாளர்… விமர்சகர்… தமிழை இலாவகப்படுத்துவதில் வல்லவர்.

தமிழ் ஈழத்து தென்மராச்சியில் உள்ள நுணாவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. கா. விசயரத்தினம் அவர்கள் ‘கணினியை விஞ்சும் மனிதமூளை’ எனும் அறிவியல் நூலை 2005ல் வெளியிட்டுள்ளார். 2007ல்

No comments:

Post a Comment