Saturday 12 June 2010

புலம்பெயர்ந்த பறவை ஒன்றின் நீள்மௌனம!



- முல்லைஅமுதன் -

இடியாய் வந்து விழுந்தது. காறு;றும் வீச மறந்திருக்கலாம். மழையும், குளிரும் நம்மை அயர வைத்திருக்கலாம். எனி நம்மை ஆசுவாசப்படுத்திக் கொன்டிருந்த ஒரு பொழுதில் இன்னொரு அதிர்ச்;சியும் எம்மை அதிர வைத்தது. அது தான் மனநல வைத்தியர் க. இந்திரகுமார் அவாகளின் மரண செய்தி. (21-12-2008) காலைக்கதிர் ஆசிரியரிடம் இருந்து கிடைத்தது.

யாழ்ப்பாணம் கதிரவேலு-சிவபாக்கியம் தம்பதிகளுக்கு மகனாக 1945ல் பிறந்த இவர் மனநல வைத்தியராகவும், அறிவியல் நூல்களுடன் பிற நல்லறிஞர்களின் நூல்களை வெளியிடும் பதிப்பாளராகவும் மிளிர்ந்தார். இவர் பிரதம ஆசிரியராக இருந்து மேகம் மாத இதழை தொடந்து ஓராண்டுக்கு மேல்லாக தொடர்ந்து நடாத்தி வந்தார்.

இலங்கையில் இருந்த காலத்தில் அறிவியல், மருத்துவ கட்டுரைகளை அனைத்துப்பத்திரிகைகளிலும் எழுதி வந்திருந்தார். இவர் எழுதிய மண்ணில் இருந்து விண்ணுக்கு எனும் நூலுக்கு 1973 ல் இலங்கையரசின் சாகித்தியமண்டலப்பரிசு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. செங்கையாழியான் எழுதிய வாடைக்காற்று நாவல் திரைப்படமானபோது கே. எம் வாசகரின் இயக்கத்தில் அமரர் இந்திரகுமார் கதாநாயகனாக நடித்ததுடன் இலங்கை வானொலியில் பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியுமுள்ளாh. இவர் எழுதிய ‘விண்வெளியில் வீரகாவியங்கள்’ எனும் நூலுக்கு தமிழக அரசின் பரிசு (1996) கிடைத்தது.

இவர் நடனக்கலைஞர் விஐயாம்பிகை அவர்களை வாழ்கைத்துணைவியாக்கிக் கொண்டார். இவர்களுக்கு விநோதினி என்ற மகளும் உண்டு. ஈழத்துத் தமிழர் வரலற்றை நூலாக எழுதி வெளியிட இருந்தவரின் கனவு நனவாகவில்லை என்பது கவலைக்குரியது. சிலகாலம் விடுதலை, காலைக்கதிர் ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியர் குழுவிலும் இருந்துள்ளார். இலங்கையில் விண்வெளிக்கழத்தின் ஸ்தாகராக இருந்த இவர் உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி எழுத்தாளர் அமரர் ஆதர் சி. கிளார்க்கின் நண்பருமாவார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராகவும், அக்கட்சியின் அமரர் பீற்றர்கெனமன் அவர்களுக்கு தமிழ் மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றிமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

பல்கலைவிற்பன்னரான இவரின் மரணம் இலக்கிய உலகத்திற்கு பேரிழப்பாகும்.

இவர் எழுதிய நூல்கள்

1. FIRE WALKING THE BURNING FACTS (ENGLISH)
2. மண்ணில் இருந்து விண்ணுக்கு
3. புதுயுகம் கண்டேன்
4. விண்வெளியில் வீரகாவியங்கள்
5. டயானா – வஞ்சித்தாரா? வஞ்சிக்கப்பட்டாரா?
6. வயாக்ராவும் ஏனைய சிகிசிசை முறைகளும்.
7. புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு ஓர் அறைகூவல்

இவர் பதிப்பித்த நூல்கள்

1. இலங்கேஸ்வரன் (நாடகம்) – ஆர். எஸ். மனோகர்
2. யாழ்ப்பாணத்தின் வீரத்தமிழ் மன்னன் இரண்டாம் சங்கிலி (நாடகம்) – கௌதம நீலாம்பரன்
3. திருக்கோணேஸ்வரம் தான் தெட்சணகயிலாயம் (தொல்லியல்) – பண்டிதர் வடிவேலு
4. The Marathan Crusade for ‘FIFTY. FIFTY’ (SPEECH) G.G.PONNAMBALAM

No comments:

Post a Comment