
எழுத்தாளர் சிவலிங்கம் சிவபாலன்!
-முல்லைஅமுதன் -
ஈழத்து இலக்கிய உலகம் இன்னும் ஒரு படைப்பாளியை 23.05.2008 ல் இழந்துள்ளது. இலக்கியச் செழுமை மிக்க யாழ்ப்பாணத்திலுள்ள
நாயன்மார்கட்டு கிராமத்தில 1954ல்; பிறந்த இவர் வீரம் விழைந்த உரும்பிராய் மண்ணில் ஊன்றிக் கால் பதித்தவர். பின்னாளில் 1985 தொடக்கம் பிரான்ஸிற்கு புலம்பெயர்ந்தார். எவருடனும் பழகுவதற்கு இனிமையானவர். எவரையூம் எளிதில் நண்பராக்கிக் கொண்டுவிடுவார். தமிழ் மக்களுக்கான விடியல் விரைவில் வரவேண்டும் என விரும்பும் பலரில் இவரும் ஒருவர். வி. ரி.
இளங்கோவன்.. தியாகி சிவகுமாரன் பற்றி நிறையவே அறிந்து வைத்திருந்தார்.
ஊரில் இருந்த காலத்திலேயே தேன்மலர் எனும் சஞ்சிகையை நடத்தியுள்ளார். கவிதை, சிறுகதை, கட்டுரை என தன் எழுத்தை
விரிவுபடுத்தினார். ஈழமுரசு, எரிமலை, உயிர்நிழல், போன்ற பத்திரிகை, சஞ்சிகைகளில் எழுதி வந்துள்ளார். 1998 ல் ‘சுரங்கள் மாறி……’
எனும் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தார். பலரையூம் நேசித்தார். எழுத்தாளர் கலாநிதி சொக்கன் அவர்கள் மீது மிகுந்த
மாpயாதை வைத்திருந்தார். அவரின் மாணவன் என்று சொல்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அதனால் தான் காற்றுவெளி நுர்லகம்
வெளியிடும் இலக்கியப்பூக்கள் எனும் தொகுதிக்கு கலாநிதி சொக்கன் அவர்களைப்பற்றிய கட்டுரையை எழுதித் தந்துள்ளார்.
நிறைய வாசிக்கும் பழக்கம் உள்ள இவர் இங்கிலாந்திற்கு வந்தபின்பு ஒரு இலக்கிய வெறுமையை உணர்ந்தவராகக் காணப்பட்டார்.
அதனால் தானோ என்னவோ காற்றுவெளி நுர்லகத்தை தன் வாசிப்புக்காகப் பயன்படுத்த தொடர்பு கொண்டார். சிலநாட்களிலேயே
இதயஅறுவைச்சிகிச்சைக்குட்படுத்தப்பட்டார். பின்னரும் இலக்கிய ஆர்வலர்களுடன் அதிகமாகவே தொடர்புகளை அதிகமாகவே
பேணிவந்தார். இலக்கியம் பற்றி பேசுவதற்கான தன் ஆதங்கங்களை, ஆர்வத்தை எழுத்தாளர்களுடன் பேசும் போது வெளிப்படுத்தினார்.
அவாpன் வார்த்தைகளில் மெல்லியதான சோகம் இழையோடியதையூம் எம்மால் உணர முடிந்தது. சிறுவயதின் நாடக முயற்சிகளை மீட்டுப்பார்த்து இப்பொழுது அது முடியாத ஏக்கம் எமக்குப் போலவே அவருக்கும் இருந்துள்ளது. தன் படைப்புகள் முழுவதையூம் தொகுத்து ஒரு நுர்லாகவூம் தனித்து ஒரு நாவலும் எழுதத் திட்டமிட்டிருந்தார் அவரின் ஆசைகள் நிறைவேற நாமும்
பிரார்த்திப்போமாக…
No comments:
Post a Comment