Saturday 12 June 2010

பின்னிரவுப் பெருமழை ‍ -கவிஞர் முல்லையமுதன்



நூல் -பின்னிரவுப் பெருமழை
‍நூலாசிரியர் -மு. ரிலுவான்கான்
மித்ர பதிப்பகத்தின் ஊடாக வெளிவந்துள்ள இன்னூலின் சாராம்சமே முன்னுரை வழங்கிய பா. ரவிக்குமாரிடமிருந்து பெறமுடிகிறது. கம்பன் முதல் இன்றைய கவிஞர் வரை பலவாறாக கவிதைகளைச் சுவைத்தே வந்துள்ளோம்.

வானம்பாடிக்குப் பிறகு பல கவிஞர்கள் வந்தாலும் எழுத்து, கசடதபற, காலச்சுவடு, கணையாழி, புதியபார்வை, நவீன விருச்சம் என பல இதழ்கள் கவிதைகளைப் புடம்போட களம் அமைத்ததை மறுக்கமுடியாது.

காதல்க் கவிதைகளினூடாக ஏற்றத்தாழ்வு, மாற்றம், விடிவு என விரிவாகவும் ஆழமாகவும் கவிதைகள் பல வந்துள்ளன. நறுக்கென நல்ல கவிதைக்கு அமுத பாரதியின் புள்ளிப்பூக்கள் நூலைக் குறிப்பிடலாம். மேத்தாவின் கண்ணீர் பூக்கள் தொடங்கி அவரின் இறுதித் தொகுப்பு வரை காதல் ஊடாக சமுதாயம் நோக்கி விழுந்தவை தான். கண்ணதாசன் ஈரோடு தமிழன்பன், வைரமுத்து, ஆத்மானாம், யூமாவாசுகி, விக்கிரமாதித்தியன் என பலபல கவிஞர்களைக் கண்ட கவிதையுலகம் புதிதாய் மு. ரிலுவான்கானின் படைப்புலகம் பற்றி அறிய இன்னூல் வழிசமைத்துள்ளது. இவருக்கும் ஆத்மானாம், நகுலன் கவிதைகள் ஆகர்ஷித்துள்ளது போலும். தலைப்பே ஒரு கவிதை போலத்தான்.

மீரா, மேத்தா போன்று இழைய பாரதியின் கவிதைகளை ரசித்திருக்கின்ற என்னால் இவரின் கவிதைகளுக்குள்ளும் மூழ்க வைத்து ஆச்சரியப்பட வைத்துள்ளது. ஆனாலும் நேரடியாக படித்தது ஊடாக கவிதைகளை அனுபவித்து எழுதியுள்ளார்.

என் பிரேதப் பரிசோதனையில்
கவனமாகத் தேடுகிறார்கள்
உன்னை.

இவருக்கு ஆகாயம் கையில் கிடைத்திருக்கிறது. காதல் அருகில் வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் மீதான ஏக்கம் விரக்தி பிற கவிஞர்களைப் போல காதல் தூரம்தூரமாக…. கவிதை மனக் கைப்பிடியில்……
கவிஞனுக்கான சிறப்பே வாழ்க்கையை ரசிப்பது. அந்த ரசிப்பின் ஊடாக வார்த்தைகளை வாலாயப்படுத்துவது வெற்றியாக வாய்த்திருக்கிறது.

என்னைக் கொன்றுவிட்டாய்
அவசரத்தில்
என் பிணம் புதைக்க
மறந்துவிட்டாய்…

முடிந்தது
முடிந்ததாகவே போக
நாம் சந்திக்காமலே சாகவேண்டும்.

இவரின் கவிதைகளில் வார்த்தையாலங்கள் இல்லை. சக மனிதர்களோடு உரையாடுவது போல் வார்த்தைகளை அழகாக விதைத்துச் செல்கிறார். இன்ம கவிதை நூலை வாசித்துமுடித்தபோது ஒரு அழகிய காதல் நவீனத்தை வாசித்து முடித்த அனுபவம் ஏற்பட்டது.

இனியும் வலிதாங்காது இதயம்
நீ என்னைக் காணக்கூட வேண்டாம்
கடந்தாவது போ…..

வாசித்து முடிக்கையில் மனதும் வலிக்கிறது. இவரின் எழுத்துப்பணி தொடர வாழ்த்தி இன்னொரு பரிமாணத்துடன் கூடிய கவிநூலை எதிர்பார்த்து நிற்கிறோம்.


மேலதிகக் ஆக்கங்கள்…
மனித உரிமைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க அவுஸ்ரேலியாவிடம் கோரிக்கை
ஈரான் அணுசக்தி தலைவர் ராஜினாமா
வுட்ஸோர்ஸிங்-நிறுவனங்களுக்கு ஒபாமா ‘வேட்டு’!
ஒன்றுகூடலை கைவிட்டமை அரசின் அழுத்தமே: பௌத்த சங்க பேச்சாளர்
பாகிஸ்தானுக்கு 7.5 பில்லியன் டாலர் நிதியுதவி: மசோதாவில் ஒபாமா கையெழுத்து
வவுனியா இடம்பெயர் மக்கள் முகாம்களுக்கு விஜயம் செய்தார் பிளேக்

No comments:

Post a Comment